
- தூக்கத்தின்
ஏதோ ஒரு அடுக்கில்
என் கனவில்
மழை பெய்கிறது
என்னருகில்
உறங்கிக் கொண்டிருக்கும்
நீயும் இப்போது
என் கனவுக்குள் வருகிறாய்
நனைந்து கொண்டே
- மழையில் நனைந்த வெயிலில்
நான் காய்ந்து கொண்டிருக்கிறேன்
வெயிலில் காய்ந்த
மழையில்
நீ நடந்து கொண்டிருக்கிறாய்.
நம் கண்கள்
சந்தித்த தருணத்தில்
சாரல் விழ,
ஒரு கவிதை
மெதுவாய்
நனையத் தொடங்குகிறது
- மழையைஎதிர்பார்க்கும்
தருணங்களில்
சேற்றை
வாரி இறைத்து விட்டு
சிரித்துக் கொண்டு போகிறது
மாலை மழை
4. “மழை வரல
கவிதை எழுத முடியாது”
என்று கன்னம் கிள்ளி சொல்லிப் போகிறது
காலை வெயில்.

Leave a comment